எதனால் தேன்மொழிக்கு இந்த நிலை ?



reasons-between-erode-lovers-thenmozhi-and-surender
தேன்மொழியின் வாக்குமூலம் மற்றும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையின் தொகுப்பு பின்வருமாறு..

தேன்மொழி மற்றும் சுரேந்தர்  இருவரும் ஈரோடு மாவத்தை சேர்ந்தவர்கள், கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். வேறு வேறு ஜாதி என்பதனால் வீட்டில் இருவரின் காதலுக்கு தடைபோடப்பட்டது,

அதுமட்டுமின்றி ஒருவரை ஒருவர் சந்திக்கவும், பேசவும் வீட்டில் கெடுபிடி எழும்பவே இருவரும் பிரிந்து இருந்தனர்.

இருப்பினும் சுரேந்தர் விடாமல் தேன்மொழியிடம் பேச முயற்சிசெய்துள்ளார், தான் இருக்கும் சூழ்நிலையை சுரேந்தருக்கு எடுத்துச்சொல்லவும் முடியாமல் அவரை புறக்கணிக்க ஆரம்பிக்கவே சுரேந்தருக்கு கோவம் வந்துள்ளது.

இந்த நேரத்தில் தேன்மொழிக்கு சென்னையில் கூட்டுறவு துறையில் வேலை கிடைக்கவே, சென்னை எழும்பூர் வீராசாமி தெருவில் ஒரு விடுதியில் தங்கி வேலைபார்த்து வந்துள்ளார் மேலும் வேலைக்கு செல்ல சேத்துப்பட்டு ரயில்நிலையம் வந்துதான் ரயில் ஏறி சேல்வார்.
.

இதனை அறிந்த சுரேந்தர் சென்னைக்கு விரைந்து தேன்மொழி தினமும் ரயில் ஏறும் சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் தேன்மொழிக்காக காத்துக்கொண்டிருந்தார்.

முதல்நாள் சுரேந்தரிடம் நடந்ததை எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்காமல் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்துள்ளார், இதனிடையே சம்பவத்தன்று சுரேந்தர் கோவம் அதிகரிக்கவே தான் கொண்டுவந்திருந்த அரிவாளால் தேன்மொழியின் இடது தாடை மற்றும் கைகளில் தாக்கினார்.

இதில் படுகாயமடைந்த தேன்மொழி இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த நடைமேடையில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்...

இதனால் செய்வதறியாது நின்ற சுரேந்தர் சற்றுநேரத்தில் அங்கு வந்த மின்சார ரயில் முன் பாய்ந்தார். ரயில் முன்னரே அவரை கடந்தால் தலையில் மட்டும் பலத்த அடியுடன் வீழ்ந்தார்.

இருவரையும் ரயில்வே காவல்துறையினர் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்