பெண்ணாக பிறந்ததே பாவம்; கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசு கொலை


பெண்ணாக பிறந்ததே பாவம்; கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசு கொலை, madurai-female-child-incident-father-grandmother-arrested
பெண்ணாக பிறந்ததே பாவம்; கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசு கொலை, madurai-female-child-incident-father-grandmother-arrested


மதுரை

மதுரை அருகே சோழவந்தான் பூமேட்டுப் பகுதியில் கள்ளிப்பால் கொடுத்து பிறந்து 4 நாள்களே ஆன பெண் சிசுவை கொலை செய்ததாக குழந்தையின் தந்தை மற்றும் பாட்டி கைது செய்யப்பட்டனர்.


தவமணி, சித்ரா தம்பதியருக்கு இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தை இருக்கும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4வது பெண் குழந்தையை பெற்றெடுத்தார் சித்ரா. அந்த குழந்தை உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை உயிரிழந்தாகக் கூறப்படுகிறது. குழந்தையின் சடலத்தை வீட்டின் அருகே வைகையாற்றில் தவமணி மற்றும் அவரது குடும்பத்தினா் புதைத்துள்ளனா்.

காவல் நிலையத்தில் புகார்:

சோழவந்தான் கிராம நிா்வாக அலுவலா் சமையன், தவமணி மற்றும் குழந்தையின் பாட்டி பெண் சிசு கள்ளிப்பால் கொடுத்து கொள்ளப்பட்டதாக சோழவந்தான் கிராம காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

உடற்கூறு ஆய்வு

இதனை தொடர்ந்து காவல் துறை, மதுரை கோட்டாட்சியா், சமயநல்லூா் டி.எஸ்.பி, வாடிப்பட்டி வட்டாட்சியா், குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பாண்டியராஜா ஆகியோா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா் மேலும் அதை தொடா்ந்து பெண் சிசு சடலத்தைத் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்யக் கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.
பெண்ணாக பிறந்ததே பாவம்; கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசு கொலை, madurai-female-child-incident-father-grandmother-arrested
பெண்ணாக பிறந்ததே பாவம்; கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசு கொலை, madurai-female-child-incident-father-grandmother-arrested

இதனிடையே பெண்ணாக பிறந்ததால் பெற்ற தந்தை மற்றும் குழந்தையின் பாட்டி ஆகியோர் சிசுவிற்கு கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்