பரபரப்பில் கோலிவுட்.. பிரபல நடிகைக்கு கொரோனாவா..? இயக்குனர் விளக்கம்!

சென்னை: சமீபத்தில் நடிகை நயன்தாராவுக்கு கொரோனா பாதிப்பு என சமூக வலைத்தளங்களில் பரவி வந்த செய்தி ரசிகர்கள் மத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
nayanthara-affected-by-covid-19-Image from one india

நாடுமுழுவதும் பல முக்கிய புள்ளிகள் உள்பட பலர் தினந்தோறும் லட்சக்கணக்கில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகின்றனர் மேலும் ஆயிரக்கணக்கானோர் இதனால் பலியாகின்றனர்.

பிரபலங்கள்
தமிழ்நாட்டிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தத் தொற்றுப் பிரபலங்களையும், விளையாட்டு வீரர்களையும் மற்றும் அரசியல்வாதிகளையும் விட்டுவைக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் உயிரிழந்தார்.
அவர் மனைவி எம்.என்.ராஜமும் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
nayanthara-affected-by-covid-19-from one india

நடிகை நயன்தாரா
இந்த இக்கட்டான நிலையிலும் பிரபல முன்னணி நடிகை நயன்தாரா, இயக்குநர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் 
 இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் இந்த கொடூர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வெளியில் வராமல் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது. இதனால் தமிழ்த் திரையுலகம் பரபரப்பானது.

கோபமாக மறுப்பு
இந்த செய்தி பற்றி இயக்குனர் விக்னேஷ் சிவன் இடம் விசாரித்தபோது கோபமாக மறுத்துள்ளனர். தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தாங்கள் தனிமைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கோபமாக தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது சமூக வலைத்தளங்களில் அதிகாரப்போர்வமாக தெரிவிக்க இருப்பதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்