அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை பிரதமருக்கு அழைப்பு

டெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான முதல் பூமி பூஜை விழாவில் கலந்து கொள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி வழக்கு நிறைவடைந்து இந்து அமைப்புகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ள நிலையில் கொரோனா நேரத்திலும் அங்கு நான்குமுறை ராமர் கோவில் கட்ட  ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பு சார்பாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் கோவில்கட்ட பூமி பூஜை செய்ய முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ராமர் கோவிலுக்கான பூமி பூஜை வரும் ஆகஸ்ட் 3 அல்லது 5ம் தேதி செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவிற்கு பிரதமர் மோடியை அழைக்க அந்த குழு முடிவு செய்துள்ளது. 
இருந்தும் பிரதமர் மோடியின் முடிவை பொறுத்து இரண்டில் ஒருநாள் தேர்வு செய்யப்படும் என்று கூறுகிறார்கள். இதன் மூலம் அயோத்தியில் அந்த குறிப்பிட்ட பகுதிக்கு பிரதமர் மோடி முதல்முறை செல்ல வாய்ப்புள்ளது.
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்