தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து

 



சாதி மதங்களை கடந்து சமதர்ம சமுதாயம் அமைவதுடன்

கொரோனா இல்லாத ஆண்டாக இந்த புத்தாண்டு அமையட்டும்!

இன்பம் பெருகும், துன்பம் ஒழியும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் அனைவரும்  ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நன்நாளில் இருந்தாவது தங்கள் வாழ்க்கை மேன்மையடையும் என்கின்ற நம்பிக்கையிலேயே அவர்கள் புத்தாண்டை எதிர்நோக்குகின்றனர். அந்த வகையில், 2021 ஆம் ஆண்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும், ஏழை - எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், வாழ்வில் வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டும். 

இந்த ஆண்டில் சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு இன்றி, சமதர்ம சமுதாயம் அமைந்திடவும், மனிதநேயம் மலர்ந்திடவும், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் கிடைத்திடவேண்டும்.

2020 போன்று அல்லாது 2021-ஆம் ஆண்டு கொரோனா இல்லாத ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். தமிழக மக்கள் அனைவருக்கும் தேமுதிக சார்பில் இனிய புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அனைவரின் பாதுகாப்பு கருதி இந்த புத்தாண்டின்போது நாம் நேரடியாக சந்திப்பதை தவிர்ப்போம்.

#HappyNewYear2021

Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்