மருத்துவமனையில் நடராஜன்...முழங்காலில் அறுவை சிகிச்சை

கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் நடராஜனின் சிறப்பாக பந்து வீசி யார்க்கர் கிங் என்று எல்லோராலும் பாராட்டும் வண்ணம் விளையாடினார்.



சிறப்பான தனது யார்க்கர் பந்துவீச்சால் அனைவராலும் பேசப்பட்டு , தொடர்ந்து இந்திய அணியிலும் இடம்பிடித்து, இங்கிலாந்து ஆஸ்திரேலியா  கிரிக்கெட் தொடர்களிலும் அமர்க்களப்படுத்தினார்.


தொடர்ந்து இந்த ஆண்டிற்கான 2021 ஐபிஎல்  தொடரில் ஐதராபாத் அணியின் முக்கிய பந்து வீச்சாளராகவே நடராஜன் தேர்ந்தெடடுக்கப்பட்டு கொல்கத்தா, பெங்களூரூ அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினார்.


ஆஸ்திரேலிய தொடரின் போது, தனது முழங்காலில் ஏற்பட்ட காயம் தற்போது அவருக்கு பெரும் பிரச்சனையாக மாறி விட்டது என்பதே உண்மை. இதனால், ஐபிஎல் தொடரில் இருந்து விலக நடராஜன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐதராபாத் அணி நிர்வாகம் வெளியிட்டது.


நடராஜன் தனது இந்த நிலைமையை தனது ரசிகர்களுக்கு தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றியிருந்தார்.


தற்போது அவருக்கு முழங்காலில் அறுவைசிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் நடராஜன் "நான் இன்று மிக முக்கியமான நடவடிக்கை எடுத்துள்ளேன். முன்பைவிட வலுவாகவும் ஆரோக்கியமாகவும் திரும்புவேன் என எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்